Tuesday, July 7, 2009

துரோகிகளின் வழியில் சென்ற வழுதியின் வழியினிலே >>>>>

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2
இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும்.

அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார்.

வழுதி முன்பு எழுதியதில் "முன்னாலே சென்றோரின் பின்னால் "என்பதை நீக்கி இப்போது வெறும் "சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3" என்று தலைப்பிட்டிருக்கின்றார்

முன்னர் எழுதியதில் முன்னால் சென்றவர் தேசியத்தலைவர் அவரின் பின்னர் சென்றோர் தமிழர் படை என்று எழுதியிருந்தார்

இம்முறை சென்றவரின் வழியினிலே என்று யாரின் வழியினிலே என்று சொல்லவில்லை

அது கருணாவா , மாத்தயா என்று சொல்லாமல் விட்டுவிட்டார்

கருணாவால் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கருணா பிதற்றியதை வழுதி பிதற்றி வருகின்றார் அப்படியானால்

வழுதி யாரின் வழியினிலே செல்கின்றார் என்று சொல்லத் தேவையில்லை
அதை காவி வரும் புதினமும் யாரின் வழியினிலே என்றும்

இப்போது இலங்கைத் தீவில் - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் அநேகமாக எல்லோருமே வீரச்சாவு அடைந்து விட்டார்கள்; மிகுதிச் சில பேர் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் யாரும் இல்லை என்றால் தேசியத் தலைவர் இல்லை என்று யார் உங்களுக்கு உறுதிப்படுத்தியது ???

சிறிலங்கா இராணுவமா அல்லது
ரோவா அல்லது
கருணாவா அல்லது
தேசியத் தலைவரின் ஆவியா ??

வழுதி தன்னுடைய அறிவுரைகளை தேசியத் தலைவர் கேட்டிருந்தால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும் என்பது போலவும் தமிழ்மக்களது படுகொலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் என்பது போலவும்

தேசியத் தலைவர் மக்கள் கொல்லப்படுவதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை தானும் பத்மநாதனும் தான் கவலைப்பட்டோம் என்பது போல்

மீண்டும் தேசியத் தலைவரின் மேல் சேறு பூசும் தனது குழி பறிக்கும் வேலையில் தமிழ்மக்களின் காவலனாக காட்டிக்கொண்டு தமிழ்மக்களுக்கு குழி வெட்டுகின்றார்

இவர் எப்போதுமே சில தமிழ் மக்களின் சமகால நடவடிக்கைகளை காட்டி அதற்கு சார்பாக ஒன்றை எழுதி விட்டு பின்னர் அதனுடன் தனது சகுனி வேலையையும் இணைத்து விடுவது இவரின் சாதூரியம்

ஆனால் அதுவே இவரின் பச்சோந்தி தனத்தையும் காட்டிவிடுகின்றது

துரோகிகள் எப்போதுமே தமிழ்மக்களில் அக்கறை உள்ளவர்கள் போலும் தாம் புலிகளுக்கு மட்டுமே எதிரிகள் என்பது போலும் வழுதி வரை எழுதியும் நடித்துக்கொண்டும் இருக்கின்றார்கள்

இவர்களுக்கு புலி எதிர்ப்பைத் தவிர வேறு ஒரு மண்ணும் கிடையாது

வழுதி விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்படாத பிரநிதியாக தன்னைத் தானே அடையாளப்படுத்தி தானும் இறுதி வரை புலிகளின் வாரிசு ஆக காட்டுகின்றார்


வழுதி சாதிக்க முயல்வது என்ன ???

1. தேசியத் தலைவரை மக்களின் மனங்களிலிருந்து அகற்றுவது -

தேசியத் தலைவரை சாகடிக்க மேற்கொண்ட எவையும் எடுபாடாது போனதால் அவரை தமிழர்களது மனங்களில் இருந்து அகற்றினால் அவர் உயிருடன் இருந்து ம் பயனற்றவர் ஆகிவிடுவார்

அதற்கு அவரை துதி பாடி பின்னர் அவரின் மேல் சிறிது சிறிதாக சேறு பூசுவது

இதற்காகத் தானா சிறிலங்கா காட்டிய உடலில் சேறு பூசி வைத்திருந்தார்களோ என்னவோ ??

2. தனது சகுனி வேலைகளையும், உண்மைகளையும் கலந்து எழுதுவதனால் இரண்டையும் தமிழ்மக்கள் நம்பாமல் செய்ய முற்படுவது

- தமிழ்மக்களை தொடர்ந்தும் குழப்பநிலையிலேயே வைத்திருந்து மந்த நிலைக்கு மாற்றுவது

இளந்திரையனின் இறுதிப் பேட்டியில் சொன்னது போல்

மக்கள் பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் பக்குவம் உடையவர்களாக இருக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்

தமிழ்மக்கள் இப்போது யாரையும் நம்ப முடியாத கையறு நிலையில் வைத்திருக்க முயலுகின்றார்கள்


இவர்களின் கடந்தகால வரலாறு என்ன என்பது பற்றியும் சிந்தியுங்கள்.


தமிழ்மக்கள்மேல் அக்கறைகொண்டவர்களாக நடிக்கின்ற இக்கூட்டம்


ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்

ஆகவே தமிழர்களின் சுய மரியாதையுடனான வாழ்வுக்கு வழிகாட்டும் கொள்கை வகுப்பின் கீழ்
தேசியத் தலைமையின் வழிகாட்டலில் செல்வோரின் பின்னால் ஒன்றிணைவோம்

மக்களே தலைவர் துரோகிகளைப்பற்றி கூறிய

"எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்"

என்ற சிந்தனையை நிலைநிறுத்தி துரோகிகளை ஒதுக்கி எமது இலட்சியத்தை நோக்கி முன்னகர்வோம்.

No comments:

Post a Comment