Thursday, May 14, 2009

பிரான்ஸ்வாழ் தமிழ் மக்களே! உடனே ஒன்று கூடுங்கள்

பிரான்சில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மக்கள் எழுச்சிப்போராட்டம் 39வது நாளாகத் தொடர்கின்றது. எனவே அனைத்து மக்களும் தொடர்ச்சியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வன்னியில் நிலவும் மிகமோசமான நிலையினால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எந்த இடையூறு வந்தாலும் தொடர்ச்சியாகப் போராட வேண்டியுள்ளதால் பிரான்சில் மக்கள் எழுச்சிப்போராட்டம் முழு வீச்சுடனும் வேகத்துடனும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பிரான்சில் தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள லா சப்பல் பகுதில் இப்போராட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியல் இப்போராட்டம் நடைபெறுவதால் மக்கள் இடமாற்றம் பற்றிய தகவல்களை அவதானித்து போராட்டங்களில் பங்குபற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதே வேளை பிரான்சில் நடைபெறவிருந்த தமிழீழப்பரகடனத்திற்கான வாக்குப்பதிவு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்டுள்ளது. மேலும் இது பற்றிய செய்தி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment