Friday, May 15, 2009

சிறிலங்காவின் இனப்படுகொலைத் தாக்குதலில் 24 மணி நேரத்தில் 1700 பேர் பலி

வன்னியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் தமிழ் மக்கள் ஆயிரத்து 700 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சிறீலங்கா படையினர் தொடர்ச்சியான இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டுவரும் நிலையில், நேற்று மாலை முதல் இன்று மாலைவரை இவ்வளவு தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகள், மற்றும் அவர்களின் வாழ்விடங்களில் சிதறிக்கிடக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இயங்கிய ஒரேயொரு மருத்துமனையும் படையினரது தாக்குதலில் இயங்க முடியாது செயலிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த மக்கள் குருதி இழப்பினால் மரண அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment